
சத்யபுரி அரசன் சத்யசந்தன் வெகு நேர்மையாகவும், நெறிதவறாமலும் ஆண்டு வந்தான். அவன் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவனது ஒரே மகன் விஜயன். மதியுக மந்திரியின் மகன் மணவாளன். இருவரும் ஆத்ம நண்பர்கள். ஒருவரை ஒருவர் பிரியமாட்டார்கள். இளவரசன் விஜயன் கொஞ்சம் சோம்பேறி. ஆனால், மணவாளனோ அதிபுத்திசாலி. இருவருக்கும் பத்து வயது நிரம்பியது. அவர்களை தங்கள் குருகுல மகாராஜிடம் கல்வி பயில அனுப்ப வேண்டிய தருணம் வந்ததால், அரசன் சத்யசந்தன் பொதிகை மலைச்சாரலில் உள்ள குருகுல ஆஸ்ரமத்திற்கு விஜயனையும், மணவாளனையும் அழைத்துச் சென்று இருவருக்கும் எல்லா கலைகளையும் பயிற்சியளிக்க வேண்டினான்.
ஆஸ்ரம கொள்கைப்படி அவர்களின் படிப்பு முடிய பத்து ஆண்டுகள் ஆகும். அதுவரை அவர்கள் அரண்மனைக்குச் செல்ல முடியாது. மற்ற மாணவர்களைப் போலவே நடத்தப்படுவர். எவ்விதச் சலுகையும் கிடையாது.
இருவருக்கும் வேதம், சாஸ்திரம் மற்றும் போர்க்கலை, வாள் சண்டை, குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என்று எல்லா கலைகளிலும் பயிற்சி அளித்தார். எல்லாவற்றிலும் மணவாளனுக்கு நற்பெயர். எனவே, குருகுல மகாராஜ் விஜயனைக் கண்டித்து, மணவாளனை புகழ ஆரம்பித்தார். இதனால், விஜயனின் மனதில் பொறாமை தீ பற்றி எரிய ஆரம்பித்தது.
இப்படியாக பத்தாண்டுகள் உருண்டோடின. அரண்மனைக்குத் திரும்ப வேண்டிய காலம் நெருங்கியது. நன்கு பயின்ற மணவாளனை எல்லோரும் புகழ்ந்தனர். தன்னைப் பாராட்டவில்லையே என்ற ஏக்கம் விஜயன் மனதில் ஏற்பட்டது. ஆகவே, வஞ்சமாக மணவாளனை பழிவாங்க வேண்டுமென அவன் மனம் துடித்தது. இதையறியாத மணவாளன் எப்போதும் போல சகஜமாகப் பழகி வந்தான். விஜயனின் மனமாற்றத்தை அவன் உணரவில்லை.
ஒரு நாள் விஜயனும், மணவாளனும் படகு சவாரி செய்தனர். மணவாளனுக்கு அவ்வளவாக நீச்சல் தெரியாது. இதுதான் தக்க சமயம் என்று நினைத்து, விஜயன் படகை ஒரு சுழலில் சிக்க வைத்து மூழ்கும் படி செய்தான். படகு கவிழ்ந்து இருவரும் நதியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். விஜயன் நீந்தி கரை சேர்ந்தான். தனக்கு நேர்ந்த கதிக்காக மணவாளன் குருமகாராஜை நினைத்து, தன்னைக் காப்பாற்ற வேண்டினான். நிஷ்டையில் இருந்த குருமகாராஜ் அதிர்ச்சியடைந்து, தன் வலிமையால் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தை உணர்ந்து இருவரும் பிழைத்துக் கொள்ள அருள்புரிந்தார்.
என்ன ஆச்சர்யம்! நதியில் அடித்துச் செல்லும் மணவாளனுக்கு அருகில் ஒரு பெரிய வாழை மரம் மிதந்து வந்தது. அதைத் தாவிப் பிடித்துக் கொண்டு கரை ஏறினான். அவனுக்கு விஜயன் செய்த சூழ்ச்சி தெரியாது. ஆகவே, நதியில் விழுந்த இளவரசன் விஜயனுக்கு என்னவாயிற்றோ என புலம்பிக் கொண்டு ஆஸ்ரமத்தை நோக்கி விரைந்தான்.
இதற்கு முன்பே நீந்தி வெளியேறிய விஜயன், தான் அவசரத்தில் இப்படி செய்து விட்டோமே என அவன் மனசாட்சி உறுத்தியது. ""ஆண்டவனே! மணவாளனைக் காப்பாற்று. என் குற்றத்தை மன்னிக்கவும்!'' என கதறிக் கொண்டே ஆஸ்ரமத்தை அடைந்தான்.
அவன் கதறி அழுவதைக் கண்ட குரு மகாராஜ், ""என்ன விஜயா... என்னவாயிற்று? ஏன் இப்படி புலம்புகிறாய்?'' என்று கேட்டார்.
""குருதேவா! நான் மகாபாவி. ஆத்திரத்தாலும், பொறாமையாலும் என் ஆத்ம நண்பனை இழந்து விட்டேன். அவன் மரணத்திற்கு நான்தான் காரணம். என்னையும் நதியில் தள்ளிக் கொன்றுவிடுங்கள். அவனின்றி நான் அரண்மனைக்கு திரும்பிச் செல்ல மாட்டேன்'' என்று கூறி தரையில் புரண்டு அழுதான்.
""விஜயா! உன்னை ஆசுவாசப்படுத்திக் கொள். மணவாளனுக்கு ஒன்றுமாகாது. அவன் விரைவில் வந்துவிடுவான். உள்ளே சென்று ஓய்வெடுத்துக் கொள்!'' என்று அனுப்பி விட்டார்.
அதேசமயம், மணவாளன் கதறிக் கொண்டு குருநாதர் காலில் விழுந்தான். ""குருதேவா! நான் என் இளவரசன் விஜயனை இழந்து விட்டேன். படகில் விபத்து ஏற்பட்டு நதியில் இருவரும் மூழ்கி விட்டோம். நான் தப்பித்துக் கொண்டேன். இளவரசைக் காப்பாற்றாத துரோகி நான். எனக்கு மரணதண்டனை நிச்சயம். எப்படி அரசரைச் சந்திப்பேன்'' எனக் கதறினான்.
மணவாளன் குரலைக் கேட்டதும், அரைதூக்கத்திலிருந்த விஜயன் எழுந்து வெளியே வந்து, ""மணவாளா! என் ஆருயிர் நண்பனே'' என ஆரத்தழுவிக் கொண்டு, தான் அறியாமல் செய்த குற்றத்தைக் கூறி மன்னிக்க வேண்டினான்.
மணவாளனும், ""இளவரசே! தாங்கள் நல்ல மனம் படைத்தவர். விதி நம்மை சதி செய்து விட்டது. குருமகாராஜ் அருளால் பிழைத்துக் கொண்டோம். அவர்தான் நம்மைக் காப்பாற்றினார். அவருக்கு நன்றி சொல்லி வணங்குவோம்'' என்றான்.
குருமகாராஜ் இருவரையும் கட்டி அணைத்து, ""இளவரசன் விஜயன் தான் செய்த குற்றத்தை உணர்ந்து விட்டான். குற்றம் புரிந்தவன் மனம் பட்டபாடு இருக்கிறதே, அதுதான் அவனுக்குத் தண்டனை. உங்கள் இருவரின் நட்பும் மேலானது. உங்கள் குருகுலவாசம் முடிந்தது. நாளை காலை எல்லோரும் அரண்மனைக்குச் செல்வோம். புறப்படுவதற்கு தயாராகுங்கள்'' என்றார்.
மறுநாள், எல்லோரும் சத்யபுரியை அடைந்தனர். பத்தாண்டுகள் கடந்து இருபது வயது நிறைந்த போர் வீரர்களாக விஜயனும், மணவாளனும் வருவதை அறிந்த அரசன் சத்யசந்தன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
சத்யசந்தன் குருமகாராஜிடம், ""சுவாமி! தங்கள் அருளால் இருவரும் நன்கு கல்வி பயின்று வந்துள்ளனர். எனவே, ஒரு நல்ல நாளில் விஜயனுக்கு முடிசூட்டி, மணவாளனை மந்திரியாக்கி விட்டு, நாங்கள் தங்களோடு ஆஸ்ரமத்திற்கு வந்து தவம் செய்ய விரும்புகிறோம். தாங்கள்தான் முடிசூட்டும் விழாவை நடத்தித் தர வேண்டும்'' என கேட்டுக் கொண்டான்.
இதைக் கேட்ட விஜயன், ""தந்தையே! என்னைவிட மணவாளனே எல்லாவற்றிலும் மேன்மையானவன். ஆகவே, அவன்தான் அரச பதவிக்கு உகந்தவன். அவனுக்கு முடிசூட்டுங்கள். நான் எல்லா விதத்திலும் அவனுக்கு துணைபுரிவேன்'' என்றான்.
அரசருக்கு விஜயனின் திடீர் மனமாற்றம் அதிர்ச்சியளித்தது. அதைப் புரிந்து கொண்ட குருமகாராஜ், ""சத்யசந்தா! விஜயன் சொல்வது முற்றிலும் சரியே. குருகுல வாசத்தில் ஏற்பட்ட சம்பவங்கள்தான் அதற்குக் காரணம். ஆகவே, உன் ராஜ்யத்தை இரண்டு பாகங்களாகப் பிரித்து, இருவரையும் ஒவ்வொரு பகுதிக்கு அரசனாக்கி விடு'' என ஆசி கூறினார். அதன்படி, இருவருக்கும் முடிசூட்டப்பட்டது. பிரிக்கப்பட்ட சிங்கபுரி நாடு இருவரின் ஆட்சியில் மேலும் சிறப்புற்றது.
கலாநிகேதன் பாலு
லில் சிக்க வைத்து மூழ்கும்படி செய்தான். படகு கவிழ்ந்து இருவரும் நதியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். விஜயன் நீந்தி கரை சேர்ந்தான். தனக்கு நேர்ந்த கதிக்காக மணவாளன் குருமகாராஜை நினைத்து, தன்னைக் காப்பாற்ற வேண்டினான். நிஷ்டையில் இருந்த குருமகாராஜ் அதிர்ச்சியடைந்து, தன் வலிமையால் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தை உணர்ந்து இருவரும் பிழைத்துக் கொள்ள அருள்புரிந்தார்.
என்ன ஆச்சர்யம்! நதியில் அடித்துச் செல்லும் மணவாளனுக்கு அருகில் ஒரு பெரிய வாழை மரம் மிதந்து வந்தது. அதைத் தாவிப் பிடித்துக் கொண்டு கரை ஏறினான். அவனுக்கு விஜயன் செய்த சூழ்ச்சி தெரியாது. ஆகவே, நதியில் விழுந்த இளவரசன் விஜயனுக்கு என்னவாயிற்றோ என புலம்பிக் கொண்டு ஆஸ்ரமத்தை நோக்கி விரைந்தான்.
இதற்கு முன்பே நீந்தி வெளியேறிய விஜயன், தான் அவசரத்தில் இப்படி செய்து விட்டோமே என அவன் மனசாட்சி உறுத்தியது. ""ஆண்டவனே! மணவாளனைக் காப்பாற்று. என் குற்றத்தை மன்னிக்கவும்!'' என கதறிக் கொண்டே ஆஸ்ரமத்தை அடைந்தான்.
அவன் கதறி அழுவதைக் கண்ட குரு மகாராஜ், ""என்ன விஜயா... என்னவாயிற்று? ஏன் இப்படி புலம்புகிறாய்?'' என்று கேட்டார்.
""குருதேவா! நான் மகாபாவி. ஆத்திரத்தாலும், பொறாமையாலும் என் ஆத்ம நண்பனை இழந்து விட்டேன். அவன் மரணத்திற்கு நான்தான் காரணம். என்னையும் நதியில் தள்ளிக் கொன்றுவிடுங்கள். அவனின்றி நான் அரண்மனைக்கு திரும்பிச் செல்ல மாட்டேன்'' என்று கூறி தரையில் புரண்டு அழுதான்.
""விஜயா! உன்னை ஆசுவாசப்படுத்திக் கொள். மணவாளனுக்கு ஒன்றுமாகாது. அவன் விரைவில் வந்துவிடுவான். உள்ளே சென்று ஓய்வெடுத்துக் கொள்!'' என்று அனுப்பி விட்டார்.
அதேசமயம், மணவாளன் கதறிக் கொண்டு குருநாதர் காலில் விழுந்தான். ""குருதேவா! நான் என் இளவரசன் விஜயனை இழந்து விட்டேன். படகில் விபத்து ஏற்பட்டு நதியில் இருவரும் மூழ்கி விட்டோம். நான் தப்பித்துக் கொண்டேன். இளவரசைக் காப்பாற்றாத துரோகி நான். எனக்கு மரணதண்டனை நிச்சயம். எப்படி அரசரைச் சந்திப்பேன்'' எனக் கதறினான்.
மணவாளன் குரலைக் கேட்டதும், அரைதூக்கத்திலிருந்த விஜயன் எழுந்து வெளியே வந்து, ""மணவாளா! என் ஆருயிர் நண்பனே'' என ஆரத்தழுவிக் கொண்டு, தான் அறியாமல் செய்த குற்றத்தைக் கூறி மன்னிக்க வேண்டினான்.
மணவாளனும், ""இளவரசே! தாங்கள் நல்ல மனம் படைத்தவர். விதி நம்மை சதி செய்து விட்டது. குருமகாராஜ் அருளால் பிழைத்துக் கொண்டோம். அவர்தான் நம்மைக் காப்பாற்றினார். அவருக்கு நன்றி சொல்லி வணங்குவோம்'' என்றான்.
குருமகாராஜ் இருவரையும் கட்டி அணைத்து, ""இளவரசன் விஜயன் தான் செய்த குற்றத்தை உணர்ந்து விட்டான். குற்றம் புரிந்தவன் மனம் பட்டபாடு இருக்கிறதே, அதுதான் அவனுக்குத் தண்டனை. உங்கள் இருவரின் நட்பும் மேலானது. உங்கள் குருகுலவாசம் முடிந்தது. நாளை காலை எல்லோரும் அரண்மனைக்குச் செல்வோம். புறப்படுவதற்கு தயாராகுங்கள்'' என்றார்.
மறுநாள், எல்லோரும் சத்யபுரியை அடைந்தனர். பத்தாண்டுகள் கடந்து இருபது வயது நிறைந்த போர் வீரர்களாக விஜயனும், மணவாளனும் வருவதை அறிந்த அரசன் சத்யசந்தன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
சத்யசந்தன் குருமகாராஜிடம், ""சுவாமி! தங்கள் அருளால் இருவரும் நன்கு கல்வி பயின்று வந்துள்ளனர். எனவே, ஒரு நல்ல நாளில் விஜயனுக்கு முடிசூட்டி, மணவாளனை மந்திரியாக்கி விட்டு, நாங்கள் தங்களோடு ஆஸ்ரமத்திற்கு வந்து தவம் செய்ய விரும்புகிறோம். தாங்கள்தான் முடிசூட்டும் விழாவை நடத்தித் தர வேண்டும்'' என கேட்டுக் கொண்டான்.
இதைக் கேட்ட விஜயன், ""தந்தையே! என்னைவிட மணவாளனே எல்லாவற்றிலும் மேன்மையானவன். ஆகவே, அவன்தான் அரச பதவிக்கு உகந்தவன். அவனுக்கு முடிசூட்டுங்கள். நான் எல்லா விதத்திலும் அவனுக்கு துணைபுரிவேன்'' என்றான்.
அரசருக்கு விஜயனின் திடீர் மனமாற்றம் அதிர்ச்சியளித்தது. அதைப் புரிந்து கொண்ட குருமகாராஜ், ""சத்யசந்தா! விஜயன் சொல்வது முற்றிலும் சரியே. குருகுல வாசத்தில் ஏற்பட்ட சம்பவங்கள்தான் அதற்குக் காரணம். ஆகவே, உன் ராஜ்யத்தை இரண்டு பாகங்களாகப் பிரித்து, இருவரையும் ஒவ்வொரு பகுதிக்கு அரசனாக்கி விடு'' என ஆசி கூறினார். அதன்படி, இருவருக்கும் முடிசூட்டப்பட்டது. பிரிக்கப்பட்ட சிங்கபுரி நாடு இருவரின் ஆட்சியில் மேலும் சிறப்புற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக